Posts

3,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவின் பழங்கால வானியல் ஆய்வு மையம்

Image
    கி.மு 5ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட கிரகங்களின் அமைப்பை விளக்கும் வரைபடம்   ஆய்வில் ஈடுபட்டுள்ள கொரிய நாட்டுக் குழு   அந்தக் கற்களைச் சுற்றி வேளாண்மை நடைபெற்று வருகிறது http://www.bbc.com/tamil/india-42584408 6 ஜனவரி 2018 ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநில எல்லையில் அமைந்திருக்கும், ஆந்திராவின் மெஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல் வடிவங்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மட்டுமல்லாது, வானியல் ஆய்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. முடுமால் எனும் அந்த கிராமத்தில், 80 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் அந்த இடத்தில 12 முதல் 14 அடி உயரமுள்ள 80 கற்கள் நடப்பட்ட நிலையில் உள்ளன. அங்கு சுமார் 3,500 சிறிய கற்களும் காணப்படுகின்றன. அது பேய்கள் நிறைந்துள்ள இடம் என்று அப்பகுதியில் வாழும் மக்கள் நினைக்கின்றனர். ஆனால், அது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வானியல் ஆராய்ச்சி மையமாக இருந்த இடம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். நேரம் மற்றும் பருவ காலத்தை அறிய பயன்பட்ட கற்கள் அறிவியல் வளர

சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா?

Image
பிபிசி தமிழ் பிப்ரவரி 7, 2018     அதிரம்பாக்கத்தை அகழ்வாராய்ச்சி செய்தபோது பழங்கற்காலத்திலிருந்து இடைக்கற்காலம் வரையிலான மண் படிமங்கள் காணப்பட்டன. பழங்கற்காலத்திலிருந்து இடைக்கற்காலம் தோன்றிய போது அங்கு வசித்தவர்கள் பயன்படுத்திய கற்கருவிகளில் மாற்றம் ஏற்பட்டது     1999லிருந்து இங்கு ஷாந்தி பாப்பு - அகிலேஷ் குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றனர்.      இடைக் கற்காலத்தில் சிறிய, திருத்தமான கருவிகளை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர்.  அதிரம்பாக்கத்தில் வசித்த மக்கள், அங்கு கிடைத்த கற்களிலேயே கருவிகளைச் செய்தனர்   சென்னையை அடுத்துள்ள அதிரம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த கற்கருவிகள், 3,85,000 வருடத்திலிருந்து 3,25,000 வருடங்களுக்குள் இடைக்கற்காலம் அங்கு நிலவியிருக்கலாம் என்று காட்டுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தெற்காசியாவில் இடைக் கற்காலம் முன்பு கருதப்பட்டதைவிட முன்கூட்டியே நிகழ்ந்திருக்கலாம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. Image caption அதிரம்பாக்கத்தை அகழ்வாராய்ச்சி செய்தபோது பழங்கற்காலத்திலிருந்து இடைக்கற்

Who built the Indus Valley civilisation?

http://www.thehindu.com/news/national/who-built-the-indus-valley-civilisation/article22261315.ece Tony Joseph December 23, 2017 00:15 IST Genetics is about to answer a question that has vexed historians for a century. The author examines the range of possible answers and their implications Who built the Indus Valley civilisation? There are few questions more fundamental to our understanding of Indian history than this. On the answer to it hang many details of the country’s past: How did we come to be as we are — culturally, ethnically and linguistically? And what explains the way we are spread out geographically in the subcontinent? Although this question has always been asked, the correct answer to it has proved resistant to the wiles and charms of historians, archaeologists, linguists and philologists for nearly a century, ever since Harappa and Mohenjo-daro were discovered in the 1920s. The fault doesn’t lie with the remarkable men and women who built what was easily the largest

The ghosts of Adichanallur

Image
ஆதிச்சநல்லூரின் உயிர்கள்…! எம்.கல்யாணராமன் (நன்றி: தி இந்து ஆங்கில நாளிதழ் (13.01.2018) தமிழில் : ர. சிபி நந்தன், இரண்டாம் ஆண்டு தொடர்பியல் துறை மாணவன், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர்) அவளது உடலமைப்பு நன்கு வடிவமைக்கப்பட்டதாய் இல்லை, ஆயினும் அவளது உடல் எதையோ உருவகப்படுத்தியது. பாவாடை போலவோ ஒட்டியாணம் போலவோ தோற்றமளிக்கும் ஒன்று அவளது பெரிய இடையை எடுத்துக்காட்டிற்று. அவள் காதுகளில் தொங்கிக்கொண்டிருந்த நீண்ட காதணி, திருநெல்வேலிப்பகுதிக்கே உரித்தானதாய்த் தோன்றியது. உள்ளங்கையளவுள்ள இந்த செப்பு உருவம் தூத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஆதிச்சநல்லூர் கிராமத்தில் ஒரு அகழ்வாய்வுத் தளத்தில் கண்டெடுக்கப்பட்டது என்கிறார் அருங்காட்சியகத் துறையில் மானுடவியலின் பொறுப்பாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற சி.மகேஸ்வரன். “இது வளமைக்கான தாய்க்கடவுளைக் குறிப்பதாய்த்தான் இருக்கும்” என்கிறார் அவர். “இவை ஆதிமனிதனின் கைவினைப் பொருட்கள்; கி.மு.1500ஐ சார்ந்தது” என்கிறார் இந்திய தொல்லியல் துறையின் சத்தியமூர்த்தி. தொல்லியல் மேற்பார்வையாளராக, 2004-05ல் நடந்த ஆதிச்சநல்லூரின் நான்காவது