Posts

Showing posts from February, 2018

3,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவின் பழங்கால வானியல் ஆய்வு மையம்

Image
    கி.மு 5ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட கிரகங்களின் அமைப்பை விளக்கும் வரைபடம்   ஆய்வில் ஈடுபட்டுள்ள கொரிய நாட்டுக் குழு   அந்தக் கற்களைச் சுற்றி வேளாண்மை நடைபெற்று வருகிறது http://www.bbc.com/tamil/india-42584408 6 ஜனவரி 2018 ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநில எல்லையில் அமைந்திருக்கும், ஆந்திராவின் மெஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல் வடிவங்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மட்டுமல்லாது, வானியல் ஆய்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. முடுமால் எனும் அந்த கிராமத்தில், 80 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் அந்த இடத்தில 12 முதல் 14 அடி உயரமுள்ள 80 கற்கள் நடப்பட்ட நிலையில் உள்ளன. அங்கு சுமார் 3,500 சிறிய கற்களும் காணப்படுகின்றன. அது பேய்கள் நிறைந்துள்ள இடம் என்று அப்பகுதியில் வாழும் மக்கள் நினைக்கின்றனர். ஆனால், அது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வானியல் ஆராய்ச்சி மையமாக இருந்த இடம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். நேரம் மற்றும் பருவ காலத்தை அறிய பயன்பட்ட கற்கள் அறிவியல் வளர

சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா?

Image
பிபிசி தமிழ் பிப்ரவரி 7, 2018     அதிரம்பாக்கத்தை அகழ்வாராய்ச்சி செய்தபோது பழங்கற்காலத்திலிருந்து இடைக்கற்காலம் வரையிலான மண் படிமங்கள் காணப்பட்டன. பழங்கற்காலத்திலிருந்து இடைக்கற்காலம் தோன்றிய போது அங்கு வசித்தவர்கள் பயன்படுத்திய கற்கருவிகளில் மாற்றம் ஏற்பட்டது     1999லிருந்து இங்கு ஷாந்தி பாப்பு - அகிலேஷ் குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றனர்.      இடைக் கற்காலத்தில் சிறிய, திருத்தமான கருவிகளை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர்.  அதிரம்பாக்கத்தில் வசித்த மக்கள், அங்கு கிடைத்த கற்களிலேயே கருவிகளைச் செய்தனர்   சென்னையை அடுத்துள்ள அதிரம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த கற்கருவிகள், 3,85,000 வருடத்திலிருந்து 3,25,000 வருடங்களுக்குள் இடைக்கற்காலம் அங்கு நிலவியிருக்கலாம் என்று காட்டுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தெற்காசியாவில் இடைக் கற்காலம் முன்பு கருதப்பட்டதைவிட முன்கூட்டியே நிகழ்ந்திருக்கலாம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. Image caption அதிரம்பாக்கத்தை அகழ்வாராய்ச்சி செய்தபோது பழங்கற்காலத்திலிருந்து இடைக்கற்